November 28, 2006
அறிவில்லா அக்கிரமக்காரர்களின் மனோஇச்சை!
"மனிதர்களே! உங்களில் நின்றுமே அல்லாஹ் ஓர் உதாரணத்தை உங்களுக்காகக் கூறுகிறான்: நாம் உங்களுக்களித்த செல்வங்களில் நீங்கள் உடைமையாக்கிக் கொண்ட அடிமைகளுமிருக்கிறார்களே, அவர்களில் எவரையாவது உங்களுடன் பங்காளிகளாக்கிக் கொண்டு நீங்களும், அவர்களும் சமம் என கூறிப் பாராட்டுவீர்களா? உங்களை நீங்கள் பொருட்படுத்துவதைப்போல் அவரகளை நீங்கள் பொருட்படுத்துவீர்களா? (நிச்சயமாகப் பொருட்படுத்த மாட்டீர்கள்) அவ்வாறிருக்க என்னுடைய சிருஷ்டிகளை நீங்கள் எனக்கு இணையாகவோ, பங்காளியாகவோ ஆக்கலாமா? அறிவாளிகளுக்கு நம் வசனங்களை இவ்வாறு விவரித்துக் கூறினோம். எனினும் அக்கிரமக்காரர்கள் அறிவின்றியே தங்களுடைய மனோ இச்சைகளைப் பின்பற்றி நடக்கின்றனர். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விட்டானோ, அவர்களை நேரான வழியில் திருப்பக் கூடியவர் யார்? இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை. (அல்குர்ஆன்: 30:28-29)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment