Pages

December 03, 2006

உங்கள் சுயஅறிவை எங்கு இழந்தீர்கள்!

"நபியே! பூமியும் அதிலுள்ளவையும் யாருக்குச் சொந்தமானது? நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள் எனக் கேளும்! அதற்கவர்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானது எனக் கூறுவார்கள். அவ்வாறாயின் இதனைக் கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெற மாட்டீர்களா? என கேட்பீராக! மேலும் ஏழு வானங்களுக்கும், மகத்தான அர்ஷுக்கும் இறைவன் யார்? என கேட்பீராக! அதற்கவர்கள் யாவும் அல்லாஹ்வுக்குரியனவே எனக் கூறுவார்கள். அவ்வாறாயின் நீங்கள் அவனுக்குப் பயப்பட வேண்டாமா? எனக் கூறும். அன்றி சகல பொருட்களின் அதிகாரமும் யார் கையிலிருக்கிறது? யாராலும் இரட்சிக்கப்படாதவனும், எல்லோரையும் இரட்சிக்கக் கூடியவனும் யார்? நீங்கள் அறிந்திருந்தால் சொல்லுங்கள் என கேளும்! அதற்கவர்கள் (சகல அதிகாரமும்) அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறுவார்கள். அப்படியென்றால் நீங்கள் உங்கள் சுயஅறிவை எங்கு இழந்து விட்டீர்களெனக் கூறும். நாம் அவர்களுக்கு சத்தியத்தையே கொடுத்திருந்தோம். இதனை மறுத்துக் கூறும் அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே! அல்லாஹ் எந்த சந்ததியையும் எடுத்துக் கொள்ளவுமில்லை. அவனுடன் வேறு நாயனுமில்லை. அப்படியிருப்பின் ஒவ்வொரு இறைவனும் தான் சிருஷ்டித்தவற்றை தன்னுடன் சேர்த்துக் கொண்டு ஒருவர் மற்றவர் மீது போரிட்டு மிகைக்க ஆரம்பித்து விடுவர். (நிராகரிக்கும்) இவர்கள் வர்ணிக்கும் தன்மைகளை விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவனாவான். (23:84-91).

No comments: