December 07, 2006
இறை வேதனையை பயப்படும் பொய் தெய்வங்கள்
"நபியே! இணைவைத்து வணங்குவோரை நோக்கி நீர் கூறும்! அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வங்கள் இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அவைகளை நீங்கள் அழைத்துப் பாருங்கள். அவ்வாறு அழைத்தீர்களென்றால் அவை உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் நீக்கி வைக்கவோ, அதனைத் தட்டி விடவோ சக்தியற்றவை என்பதை அறிந்து கொள்வீர்கள். இவர்கள் ஆண்டவர்களென எவற்றை அழைக்கிறார்களோ அவையும் தங்களுக்காக இறை நெருக்கத்தை வேண்டுகின்றன. தங்களையும் இறைவனோடு நெருங்க வைக்கும் வழிகள் எவை என்பதைத் தேடி கொண்டிருக்கின்றன. அவனுடைய அருளை எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்கும் பயப்படுகின்றன. ஏனென்றால் உம் இறைவனின் வேதனை நிச்சயமாக மிக (மிக) பயப்படக் கூடியதே". (அல்குர்ஆன்: 17:56-57).
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment