Pages

November 21, 2013

அல்குர்ஆன் எப்படிப் பட்டது.? அது யாருக்கு நேர்வழி காட்டும்.? அத்தகைய நேர்வழி பெற்றவர்களுடைய தன்மைகள் எப்படி இருக்க வேண்டும்.?

அலிஃப், லாம், மீம்.

இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.

(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள். இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.

இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள் - மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.  (அல்குர்ஆன் - 2:1-5)

No comments: