Pages

August 14, 2009

ஏசுநாதரின் நாவால் சாபம் பெற்ற இஸ்ரவேல் காஃபிர்கள்!

இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். (அல்குர்ஆன்: 5:78)

2 comments:

bennet jose said...

jesus resurrected is true or not, what is your quran opinion

Jafar ali said...

சகோதரர் பென்னெட் ஜோஸ் அவர்கள் கேள்வியின் தமிழாக்கம்: //ஏசு மறுபிறவி எடுத்தது உண்மையா? உங்களது குர்ஆனின் கருத்து என்ன?//

ஏசுநாதர் கொல்லப்படவே இல்லை என்கிறது குர்ஆன். பிறகு எங்கிருந்து மறுபிறவி பேச்சு வரும். ஈஸாவாகிய அவர் உலக இறுதி நாளின் அத்தாட்சியாவார். கீழ்வரும் குர்ஆன் வசனக் கூற்றைக் கவனியுங்கள்.

இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான். மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (அல்குர்ஆன்:4:157)

சகோதரர் பென்னெட் ஜோஸ் அவர்கள் கேட்டுக் கொண்டால் இதுக் குறித்த மேலதிக விளக்கங்கள் குர்ஆனிய பார்வையில் இன்ஷா அல்லாஹ் தர முடியும்.

ஈஸா (அலை)(ஏசுநாதர்) அவர்கள் குறித்து அதிக விளக்கங்கள் பெற தாங்கள் அவசியம் egathuvam.blogspot.com செல்லுங்கள். இன்ஷா அல்லாஹ் உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் அங்கு விடை கிடைக்கும்.