Pages

April 23, 2010

மாதவிடாயும், அல்லாஹ்வின் கட்டளையும்!

'(நபியே!) உம்மிடம் மாதவிடாய் பற்றி அவர்கள் கேட்கின்றனர். 'அது ஓர் தொல்லையாகும். மாதவிடாயின் போது பெண்களிடமிருந்து (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை (உடலுறவுக்காக) அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள், நிச்சயமாக அல்லாஹ் திருந்துவோரை விரும்புகிறான், தூய்மையானவர்களையும் விரும்புகிறான்' என்று (நபியே!) கூறுவீராக'. (அல்குர்ஆன் 2:222)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் யூத சமுதாயத்தில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்களை வீட்டிலிருந்து வெளியேற்றுவார்கள். உண்ணும் போதும் பருகும் போதும் தம்முடன் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். வீட்டிலும் சேர்க்க மாட்டார்கள். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் அருளினான். இவ்வசனம் அருளப்பட்ட பின் உடலுறவு தவிர மற்ற அனைத்தையும் செய்யுங்கள்! வீடுகளில் அவர்ளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: அபூதாவூது

No comments: