Pages

August 20, 2010

நாங்களும் முஸ்லிம்கள் தான் எனக் கூறிக் கொண்டு நயவஞ்சகத்தில் இருந்தோரின் நரக கூப்பாடு.

முனாஃபிக்கான ஆண்களும் முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: 'எங்களை கவனியுங்கள். உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்' என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக), அவர்களுக்குக் கூறப்படும்: 'உங்களுக்குப் பின்னால் திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்'. பிறகு அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும். அதற்கு ஒருவாயில் இருக்கும், அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும், ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.

இவர்கள் (முஃமின்களைப் பார்த்து) 'நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?' என்று (அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக் கூறுவார்கள். 'மெய்தான், எனினும் நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி விட்டீர்கள், (எங்கள் அழிவை) நீங்கள் எதிர்பார்த்தீர்கள், (இந் நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள், அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய) வீண் ஆசைகள் உங்களை மயக்கி விட்டன, அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்' என்றும் (முஃமின்கள்) கூறுவார்கள். (அல்ஹதீத் 57:13,14)

No comments: