Pages

December 16, 2010

குதிரையின் எஜமான விசுவாசம் - தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி கெட்ட மனிதன்

மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் மீது சத்தியமாக- (100:1)

பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும், (100:2)

பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்- (100:3)

மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும், (100:4)

அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக- (100:5)

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (100:6)

அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். (100:7)

இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். (100:8)

அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது- (100:9)

மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது- (100:10)

நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன். (100:11)

அல்குர்ஆன்: அத்தியாயம்-100

No comments: