Pages

December 19, 2010

’ஹுதமா’ என்றால் என்ன?

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (104:1)

(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். (104:2)

நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். (104:3)

அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். (104:4)

ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? (104:5)

அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். (104:6)

அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். (104:7)

நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். (104:8)

நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). (104:9)

No comments: