Pages

May 25, 2011

கைசேதமே! உலக வாழ்வில் நான் மலையென நம்பியிருந்த அவ்லியாக்களும், நாதாக்களும் எங்கே சென்றார்கள்!

(அல்லாஹ்வின் நேசிப்பை விட்டு மற்றவர்களை அல்லாஹ்வின் நேசிப்பிற்கொப்ப நேசித்தவர்கள் இணைவைப்பு எனும் இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள். இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும். (அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: "நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்." இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான். அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர். (அல்குர்ஆன்: 2:166-167)

No comments: