Pages

May 30, 2011

அல்லாஹ்வுக்கு அச்சம் கொள்ளாத ஆணவக்காரனின் தங்குமிடம்!

(நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கிறான். உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான். (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான். அவன் (உம்மை விட்டுத்) திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான். விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான். கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை. "அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்" என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது. அவனுக்கு நரகமே போதுமானது. நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும். (அல்குர்ஆன்: 2:204,205,206)

No comments: