Pages

July 02, 2011

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தான் நாடியதை வழங்குகின்றான். இங்கு மனித விருப்பு வெறுப்புகளுக்கு கிஞ்சிற்றும் இடமில்லை!

(யூத, கிறிஸ்தவர்களாகிய இவர்கள் )"உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்" (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும். உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?" (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது. அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான். அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன், யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக. (அல்குர்ஆன்: 3:73)

No comments: