Pages

July 27, 2011

பார்வைகள் கீழ்தாழ்ந்து. பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் புதைகுழிகளிலிருந்து மனிதன் வெளிப்படும் கஷ்டமான நாள்!

‘நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. (அல்குர்ஆன் 78:17,18)

‘இப்பூமி தூள் தூளாக்கப்பட்டதும் உமது இறைவன் வருவான். வானவர்களும் அணியணியாக வருவார்கள்’ (அல்குர்ஆன் 89:21,22)

சூரில் ஒரே ஒரு முறை ஊதப்பட்டதும், இப்பூமியும் மலைகளும் தூக்கப்பட்டு ஒரேயடியாகத் தகர்க்கப்படும் போது அந்நாளில் தான் அந்த (மாபெரும்) நிகழ்ச்சி நடைபெறும். வானம் பிளந்து விடும். அந்நாளில் அது பலவீனப்பட்டதாக இருக்கும். வானவர்கள் வானத்தின் கோடியில் இருப்பார்கள். அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை தங்களுக்கு மேல் எட்டு வானவர்கள் சுமந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 69:13-17)

‘அந்நாளில் சில முகங்கள் செழிப்புடனும் தம் இறைவனைப் பார்த்துக் கொண்டுமிருக்கும்’ (அல்குர்ஆன் 75:22,23)

அந்நாளில் அவர்கள் அழைப்பாளரை பின் பற்றிச் செல்வார்கள். அதில் எத்தகைய கோணலும் இருக்காது. மேலும் ரஹ்மானுக்கு (அஞ்சி அவனுக்கு) முன் அனைத்து சப்தங்களும் அடங்கி விடும். காலடி ஓசை தவிர வேறு ஓசை எதனையும் நீர் கேட்க மாட்டீர்! (அல்குர்ஆன் 20:108)

எனவே நபியே அவர்களை அலட்சியப்படுத்தி விடுவீராக. அவர்கள் வெறுக்கக் கூடிய ஒன்றுக்காக (விசாரணைக்காக) அழைப்பாளர் அழைக்கும் நாளில் அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் புதைகுழிகளிலிருந்து அவர்கள் வெளிப்படுவார்கள். அழைப்பாளரிடம் விரைந்து வருவார்கள். இது மிகவும் கஷ்டமான நாள் என்று அக்காபிர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 54:6-8)

No comments: