Pages

October 19, 2011

மனிதன் அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்கியவைகளே அவனுக்கு எதிராக திருப்பப்படும் ஒருநாள்!

அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்; (அத்தெய்வங்களை நோக்கி) "என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா?" என்று (இறைவன்) கேட்பான். (அதற்கு) அவர்கள் "இறைவா! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய். அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள். மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்" என்று கூறுவர். நீங்கள் சொல்லியதையெல்லாம் திடனாக இவர்கள் பொய்யாக்கி விட்டனர் ஆகவே (இப்போது வேதனையைத்) தடுத்துக் கொள்ளவோ, உதவி பெற்றுக் கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள். மேலும் உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச் செய்வோம்" (என்று இறைவன் கூறுவான்). (அல்குர்ஆன்: 25:17-18-19)

No comments: