Pages

April 08, 2012

வீண்விரயம் செய்யாது செலவு வகைகளில் நடுநிலையை மேற்கொள்ளல்!

பந்துக்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய பாத்தியதைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவுகடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்.

ஏனெனில், மிதமிஞ்சிய செலவு செய்வோர், ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ, தன் இறைவனுக்குக் கூட நன்றி செலுத்தாதவன்.

(உம்முடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உம்முடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்! அன்றி, (உம்மிடம் இருப்பதையெல்லாம் கொடுத்து) உம்முடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், முடைப்பட்டவராகவும் தங்கி விடுவீர்.

நிச்சயமாக உம் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கின்றான். (தான் விரும்பியவர்களுக்கு) அளவாகவும் கொடுக்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிந்தவனாகவும், உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன்: 17:26,27,29,30)

No comments: