Pages

October 25, 2009

நல்லுணர்வற்ற, பயமற்ற, சுய அறிவை இழந்த அக்கிரமக்காரர்கள்.

"(நபியே! நீர் அவர்களை நோக்கி) பூமியும் அதிலுள்ளவைகளும் யாருடையன என நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள் எனக் கேட்டால், அதற்கவர்கள் 'அல்லாஹ்வுக்குடையனவே' எனக் கூறுவார்கள். (அவ்வாறாயின்) இதன் மூலம் நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா? என்று கூறும். (அன்றி) ஏழு வானங்களுக்கு இறைவனும், மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்? எனக் கேட்பீராக! அதற்கவர்கள் யாவும் 'அல்லாஹ்வுக்குடையனவே' என்று கூறுவார்கள். (அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்குப் பயப்பட வேண்டாமா? என்று கூறும். அன்றி சகல பொருட்களின் அதிகாரம் யார் கையில் இருக்கிறது? யாராலும் இரட்சிக்கப்படாதவனும், (எல்லோரையும்) இரட்சிக்கக்கூடியவனும் யார்? நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள் எனக் கூறும். அதற்கவர்கள் சகல அதிகாரமும் 'அல்லாஹ்வுக்குடையதுதான்' என்று கூறுவார்கள். அவ்வாறாயின் நீங்கள் உங்கள் அறிவை எங்கு இழந்து விட்டீர்கள்? என்று கூறும்." (அல்குர்ஆன்: 23:84-89)

No comments: