Pages

April 23, 2011

பெருமைக்கொண்டு, குற்றம் புரியும் கூட்டத்திற்கான இறைவேதனையின் வகைகள்!

‘அவர்கள் (மூஸாவிடம்) எம்மை வசப்படுத்துவதற்காக நீர் எந்தவோர் அத்தாட்சியை எம்மிடம் கொண்டு வந்தாலும் நாம் உம்மை நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை என்று கூறினர். வெள்ளப் பெருக்கு, வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் என்பனவற்றைத் தெளிவான அத்தாட்சிகளாக அவர்கள் மீது நாம் அனுப்பினோம். பின்னரும் அவர்கள் பெருமையடித்துக் குற்றம் புரியும் கூட்டத்தினராக இருந்தனர். அவர்களுக்கு வேதனை ஏற்படும் போதெல்லாம், ”மூஸாவே! உமது இரட்சகன் உம்மிடம் எடுத்துக்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் எமக்காக நீர் பிரார்த்திப்பீராக! நீர் எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்கி விட்டால் நிச்சயமாக உம்மை நாம் நம்பிக்கை கொள்வோம். இன்னும் இஸ்ராயிலின் சந்ததியினரையும் உம்முடன் அனுப்பி விடுவோம்!” என்று கூறினர். அவர்கள் அடைந்துகொள்ளும் ஒரு தவணைவரை, அவர்களை விட்டும் வேதனையை நாம் நீக்கும் போதெல்லாம், அவர்கள் வாக்குறுதியை முறித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எமது அத்தாட்சிகளைப் பொய்ப்பித்து, அவற்றை அலட்சியம் செய்பவர்களாக இருந்ததினால், நாம் அவர்களைப் பழிவாங்கிக் கடலில் அவர்களை மூழ்கடித்தோம்.’ (அல்குர்ஆன்: 7:132-136)

No comments: