Pages

December 07, 2013

தீமை புரிவதில் உறுதியாக நின்றவர்கள் முகங்கள் இழிவுபட்டிருக்கும் துக்கநாள்!

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். (அல்குர்ஆன் - 99:6)  

ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். (அல்குர்ஆன் - 89:25)  

அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். (அல்குர்ஆன் - 88:2-3)  

இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். (அல்குர்ஆன் - 86:9)  

அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள். (அல்குர்ஆன் - 83:6)  

அந்நாளில் ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. (அல்குர்ஆன் - 82:19)  

No comments: