December 06, 2006
உண்மையை மறுத்து பொய் கூறுபவர்கள்!
"அல்லாஹ்வினால் இவ்வேதம் அருளப்பட்டது. அவன் யாவரையும் மிகைத்தோனும், எல்லாவற்றையும் அறியும் ஞானமுடையோனுமாய் இருக்கிறான். நபியே திட்டமாக முழுக்க முழுக்க உண்மையான இவ்வேதத்தை நாமே உமக்கு இறக்கியிருக்கிறோம். ஆகவே நீர் முற்றிலும் பரிசுத்த மனதுடன் அல்லாஹ்வை வணங்கி வாரும். வழிபாடு அவனுக்கே உரியது. தூய வழிபாட்டுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே! என்பதை விளக்குவீராக. யார் அல்லாஹ் அல்லாதவற்றை தம்மைக் காக்கும் தெய்வங்களாகவும், தம்மைப் பராமரிப்பவர்களாகவும் ஏற்படுத்தியிருக்கிறார்களோ அவர்கள் அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுடன் மிக்க சமீபத்திலாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி இவற்றை நாங்கள் வணங்கவில்லை என கூறுகின்றனர். இவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றி திட்டமாக அல்லாஹ் மறுமையில் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவான். உண்மையை மறுத்துப் பொய் கூறுபவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவதில்லை". (அல்குர்ஆன்: 39:1-3)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment