Pages

October 25, 2007

விசுவாசம் கொண்டோரின் குற்றங்களை மன்னிக்கக் கோரும் மலக்குகள்!

'அர்ஷைச் சுமந்திருப்பவர்களும், அதனைச் சூழ இருப்பவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் துதிச் செய்கிறார்கள், அவனை விசுவாசிக்கிறார்கள் விசுவாசம் கொண்டோரின் குற்றங்களை மன்னிக்கும் படியும் கோருகிறார்கள். "எங்கள் இறைவனே! நீ உன் ஞானத்தாலும், கருணையாலும் யாவற்றையும் சூழ்ந்தறிகிறாய். ஆகவே பாவங்களை விட்டு விலகி உனது வழியைப் பின்பற்றுவோருக்கு நீ மன்னிப்பளித்து, அவர்களை நரக வேதனையிலிருந்து காத்தருள்வாயாக! இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சுவனபதிகளில் அவர்களையும், அவர்களுடைய மூதாதையர்களிலும், மனைவியரிலும்,சந்ததிகளிலுமுள்ள நல்லோர்களையும் புகுத்துவாயாக. நிச்சயமாக நீயே யாவரையும் மிகைத்தோனும், யாவரையும் அறிந்த ஞானமுடையோனுமாய் இருக்கிறாய். சகல தீங்குகளிலிருந்தும் அவர்களைக் காத்துக் கொள்வாயாக. அன்றைய தினம் எவரை நீ சகல தீங்குகளிலிருந்தும் காத்துக் கொண்டாயோ அவர்மீது நிச்சயமாக நீ பேரருள் புரிந்து விட்டாய். இதுவே மகத்தான பெரும் பாக்கியமாகும்! (என்று பிரார்த்திக்கின்றனர்). (அல்குர்ஆன்: 40:7-9)

No comments: